தஞ்சாவூர், மாரியம்மன் கோயில் பகுதிகளில் அக்டோபர் 9 மின்தடை
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்.9) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அருளானந்த நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், புதுக்கோட்டை சாலை, வ.உ.சி. நகர், மேரீஸ் கார்னர், நாஞ்சிக்கோட்டை சாலை, அண்ணா நகர், சாந்தி நகர், நிர்மலா நகர், பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, பெரியார் நகர், இந்திரா நகர், எழில் நகர், நடராஜபுரம் தெற்கு, டி.பி.எஸ். நகர், மங்களபுரம், கண்ணன் நகர், பாலாஜி நகர், ஜெ.ஜெ. நகர், பொன்நகர், எல்ஐஜி காலனி விரிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் மின்விநியோகம் இருக்காது.
இதேபோல, மாரியம்மன்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், ஞானம் நகர், புறவழிச்சாலை, சித்தர்காடு, கடகடப்பை, களக்குடி, ஆலங்குடி, நெட்டாநல்லூர், நெல்லித்தோப்பு, எடவாக்குடி, காந்தாவணம், குளிச்சப்பட்டு, பணங்காடு, அன்னை இந்திரா நகர், மறியல், தில்லை, ஆர்.எம்.எஸ். காலனி, போஸ்டல் காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.