வள்ளலாரின் அவதார தின திருவிளக்கு பூஜை
திருஅருட்பிரகாச வள்ளலாரின் 196 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
திருஅருட்பிரகாச வள்ளலாரின் 196 ஆவது அவதார தின விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
அருட்பெருஞ்ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் வங்கி ஊழியர் காலனியில் உள்ள அகத்தியர் ஆலயத்தில் வள்ளலாரின் அவதார தின விழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஞாயிற்றுக்கிழமை ஸ்டாண்டார்டு சார்ட்டட் வங்கியின் துணைத் தலைவர் சுனிதா சுப்பிரமணியன் தலைமையில் மன உருக்கமும், கடவுள் வழிபாடும் என்ற தலைப்பில் பேராசிரியர் ஜெ. மகேசனின் சிறப்பு சொற்பொழிவும், வள்ளலார் காட்டும் வாழ்வியல் அறம் என்ற தலைப்பில் பேராசிரியர் பி. ராஜேந்திரனின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.தொடர்ந்து ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
இதையடுத்து மாலையில் வள்ளலாரின் அருள் வேண்டி சிறப்பு பூஜைகளுடன், சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள், ஆண்கள் பங்கேற்றனர்.