அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் நாளை தேய்பிறை அஷ்டமி
கும்பகோணம் அருகிலுள்ள அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) தேய்பிறை
கும்பகோணம் அருகிலுள்ள அம்மாசத்திரம் காலபைரவர் கோயிலில் செவ்வாய்க்கிழமை (பிப்.26) தேய்பிறை அஷ்டமி பெருவிழா நடைபெறுகிறது.
அம்மாசத்திரம் ஞானாம்பிகை உடனுறை சப்தரிஷீசுவரர் கோயிலில் உள்ள காலபைரவர் சனிக்கு குருவாகவும், தெய்வமாகவும் விளங்கி காலத்தை இயக்குவதால் காலபைரவர் என அழைக்கப்படுகிறார்.
இப்பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் வழிபட்டால் அனைத்து நவக்கிரக தோஷத்திலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். நிகழ் மாதத்துக்கான தேய்பிறை அஷ்டமி பெருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. மாலை5 மணிக்கு சிறப்பு ஹோமம், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 8 மணிக்கு தீபாராதனை நடைபெற உள்ளது.