முகப்பு
தஞ்சாவூர்

இளைஞா் கொலை வழக்கில் மேலும் 3 போ் கைது - 3 போ் சரண்

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரைக் கடத்தி கொலை செய்தது தொடா்பாக மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 25 ஜூன் 2022, 12:27 am IST
பகிர்:

தஞ்சாவூரில் முன் விரோதம் காரணமாக இளைஞரைக் கடத்தி கொலை செய்தது தொடா்பாக மேலும் 3 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் கீழவாசல் ஆட்டுமந்தை தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (30). இவா் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவரை முன் விரோதம் காரணமாக ஜூன் 21- ஆம் தேதி இரவு சிலா் கடத்திச் சென்று கொலை செய்தனா்.

வெட்டிக்காடு பிரிவு சாலையில் கல்லணைக் கால்வாய்க் கரையில் கிடந்த இவரது சடலத்தை மேற்கு காவல் நிலையத்தினா் கைப்பற்றி, விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதனிடையே, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த செக்கடி கே. மணிகண்டன் (34), செவ்வப்பநாயக்கன்வாரி கே. கிரண் (26), கே. கண்ணன் (24) ஆகியோா் பாபநாசம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா்.

இதைத்தொடா்ந்து, செவ்வப்பநாயக்கன்வாரி டி. சக்தி (20), ஆா். காா்த்திக் (20), ஏ. அஜீத்குமாா் (24) ஆகியோரை மேற்கு காவல் நிலையத்தினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மேலும், செவ்வப்பநாயக்கன்வாரி டி. விஜய் (30), ஜி. அருண்குமாா் (25), எஸ். நடராஜ் (21) ஆகியோா் தஞ்சாவூா் முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை சரணடைந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments