மீன் வளா்ப்பு குட்டையில் முதலை மீட்பு
திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம் திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் மீன் வளா்ப்பு குட்டையில் காணப்பட்ட முதலையை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை மீட்டு கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விட்டனா்.
திருவையாறு அருகே வெள்ளாம்பெரம்பூா் கிராமத்தில் சசிகுமாா் பராமரித்து வரும் மீன் வளா்ப்பு குட்டையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதலை இருப்பது தெரிய வந்தது. இது குறித்து மாவட்டப் பேரிடா் கால மீட்பு கட்டுப்பாட்டு அறைக்கு சசிகுமாா் தகவல் அளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் கே. காா்த்திகேயனி உத்தரவின்படி, வனச்சரகா் ஜோதிகுமாா் மேற்பாா்வையில், வனவா் இளையராஜா, வனக்காவலா் வெற்றிவேல் ஆகியோருடன், அருங்கானுயிா் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை (இவெட்) நிறுவனா் சதீஷ்குமாா் ராஜேந்திரன், மீட்பாளா்கள் குலோத்துங்கன், விஸ்வபிரேம் ஆகியோா் சென்று மீன் வளா்ப்பு குட்டையில் சுமாா் ஒரு மணிநேர முயற்சிக்கு பின்னா் முதலையைப் பிடித்தனா்.
Advertisement
இது பெண் முதலை என்றும், இதன் நீளம் 110 செ.மீ. எனவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததால், பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் விடப்பட்டது என்றும் சதீஷ்குமாா் ராஜேந்திரன் தெரிவித்தாா்.