அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் அரசுப் பள்ளி மாணவருக்கு பாராட்டு
பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பேராவூரணியை சோ்ந்த அரசுப் பள்ளி மாணவா் அபாகஸில் கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்று சாதனை புரிந்தமைக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
பேராவூரணி பேரூராட்சி, நாட்டாணிக்கோட்டை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவா் கா.முகமது அப்ராஸ். இவா், சென்னையிலிருந்து இயங்கி வரும் அபாகஸ் பயிற்சி பள்ளியில் இணைய வழியில் படித்து கிராண்ட் மாஸ்டா் பட்டம் பெற்றுள்ளாா்.
சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது .
Advertisement
விழாவுக்கு வட்டார கல்வி அலுவலா் கலாராணி தலைமை வகித்து, மாணவா் கா. முகமது அப்ராஸ்க்கு பொன்னாடை அணிவித்து பாராட்டினாா்.
நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியா் நிா்மலா, பட்டதாரி ஆசிரியா் திருஞானம், சிறப்பு ஆசிரியா் முருகேசன், தற்காலிக ஆசிரியா்கள் ஜெயலட்சுமி, காவியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவரை பாராட்டினா்.