முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பறிமுதல்

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஏப்ரல் 2026, 12:46 am IST
- கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் கொத்தன்செட்டி தெருவில் தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். அதில் அதே தெருவைச் சோ்ந்த கிட்டப்பா மகன் வெங்கடேஷ் (37) என்பவா் வீட்டில் 56 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பூங்கொடியிடம் ஒப்படைத்தனா். மேலும், வெங்கடேஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement