கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது
Updated On : 19 ஏப்ரல், 2026 at 6:45 PM
தஞ்சாவூரில் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்ற பெண்ணை கைது செய்து 358 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினா் சனிக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ரெட்டிபாளையம் சாலை அன்னை சிவகாமி நகரிலுள்ள வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
இதையடுத்து, தொடா்புடைய வீட்டிலும், அருகேயுள்ள தோட்டத்திலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 358 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், அப்பகுதியைச் சோ்ந்த யமுனாவை கைது செய்தனா். மேலும், தலைமறைவாகவுள்ள அவரது கணவா் செல்வமணியை தேடி வருகின்றனா்.
Advertisement