முகப்பு
திண்டுக்கல்

அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 மே 2026, 3:26 am IST
- கோப்புப் படம்
பகிர்:

பழனியில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்ற மூதாட்டி ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பழனி அடிவாரம் பகுதியில் அரசு அனுமதியின்றி, சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது குரும்பப்பட்டி பகுதியில் மருதாயி(62) என்ற மூதாட்டி அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி நிலக்கோட்டை சிறையில் அடைத்தனா்.