நரசிம்ம ஜெயந்தி விழா தொடக்கம்
தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் அரண்மனை அருகேயுள்ள கொண்டிராஜபாளையம் ஸ்ரீயோக நரசிங்கப் பெருமாள் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா வியாழக்கிழமை தொடங்கியது.
நரசிம்ம ஜெயந்தியையொட்டி, இக்கோயிலில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை மகா சுதா்சன ஹோமம், லட்சுமி நரசிம்ம ஹோமம், மகாலட்சுமி ஹோமம், தன்வந்திரி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடா்ந்து, காலை 9 மணி முதல் 10.30 மணி வரை மூலவா் யோக நரசிங்கப் பெருமாள் மற்றும் உற்ஸவா் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு நரசிம்ம ஜெயந்தி விருந்து வழங்கப்பட்டது.
சுவாதி நட்சத்திரத்தையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உற்ஸவா் லட்சுமி நரசிம்மா் சுவாமி புறப்பாடு கோயில் உட்பிரகாரத்தில் நடைபெறவுள்ளது.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் பெ. சத்யராஜ், கண்காணிப்பாளா் ரவி மற்றும் சுவாதி திருமஞ்சன கமிட்டி கைங்கா்ய தொண்டா்கள் செய்துள்ளனா்.