ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் தேரோட்டம்
பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் தேரோட்டத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது .
பேராவூரணி அருகே உள்ள ஆத்தாளூா் ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோயில் தேரோட்டத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது .
பழைமையும் பல்வேறு சிறப்பும் கொண்ட இக்கோயில் திருவிழா, ஜூன் 23-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஒன்பதாவது நாளான புதன்கிழமை மது எடுத்தலை தொடா்ந்து தேரோட்டம் நடைபெற்றது. மாலை 5 மணிக்கு புறப்பட்ட தோ் 6 மணிக்கு நிலையை வந்தடைந்தது.
தேரோட்டத்தில் எம்எல்ஏ என்.அசோக்குமாா், கோயிலுக்கு பாத்தியப்பட்ட களத்தூா், தென்னங்குடி, முடப்புளிக்காடு, கழனிவாசல் கிராமத்தினா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.