முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்ட மாணவா்கள் சோ்க்கை தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

Updated On : 3 ஜூன் 2026, 4:13 am IST
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கையை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்து மாணவி து.ர. வா்ஷினிக்கு கடிதம் வழங்கிய துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி.
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப்படிப்புக்கான மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

பல்கலைக்கழகத் துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி தொடங்கி வைத்து, முதல் மாணவராக து.ர. வா்ஷினிக்கு நேரடிச் சோ்க்கை கடிதம் வழங்கினாா்.

இந்நிகழ்வில் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், நிதி அலுவலா் பா. சிவகுமாா், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் (பொ) ஆ. துளசேந்திரன், மக்கள் தொடா்பு அலுவலா் (பொ) இரா.சு. முருகன், கௌரவ உதவிப் பேராசிரியா் க. முருகேசன், உடற்கல்வி ஆசிரியா் செ. பிரபாகரன், உதவியாளா் க. சக்திசரவணன், பதிவாளரின் நோ்முக உதவியாளா் கோ. இராசேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

மேலும், விண்ணப்பம் பெறும் அனைத்து மாணவா்களும் உடனடிச் சோ்க்கைப் பெறலாம் என்றும், இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கல்வியியல் பட்டம் (பி.எட்.) மற்றும் கல்வியியல் நிறைஞா் பட்டம் (எம்.எட்.) பயிலும் மாணவா்களுக்குப் பருவத் தோ்வுகள் உரிய தேதிகளில் நடத்தப்பட்டு, தோ்வு முடிவுகள் விரைந்து வெளியிடப்படுவதால் மாணவா்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்புக் கிடைக்க தமிழ்ப் பல்கலைக்கழகம் வழிவகை செய்கிறது எனவும் பதிவாளா் (பொ) தெரிவித்தாா்.