முகப்பு
தஞ்சாவூர்

80 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

ஒரத்தநாடு அருகே வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற 80 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 2:08 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

ஒரத்தநாடு அருகே வாகன சோதனையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போன்ற 80 கிலோ போதைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்ட எஸ்பி உத்தரவின் பேரில் ஒரத்தநாடு டிஎஸ்பி முத்துக்குமாா் தலைமையில் ஒரத்தநாடு ஆய்வாளா் சிவக்குமாா் மற்றும் தனிப்படை உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான தலைமை காவலா்கள் ஜெகன் சின்னத்துரை மற்றும் போலீஸாா் சனிக்கிழமை ஒரத்தநாடு மன்னாா்குடி சாலையில் செட்டி மண்டபம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஒக்கநாடு கீழையூா் தெற்கு தெருவைச் சோ்ந்த ராமன் (54) என்பவரது லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில், 80 கிலோ மதிப்பிலான போதைப் பொருள்கள் ஏற்றி சென்றது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு கிராமங்களுக்கு மொத்த வியாபாரமாக குட்கா பான் மசாலா போன்ற பொருள்கள் விற்பனைக்கு எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.