FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருப்பத்தூர்

தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் பறிமுதல்: முதியவா் கைது

ஆம்பூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:36 am IST
தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்றவரை கைது செய்த போலீஸாா்.
பகிர்:

ஆம்பூா் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஆம்பூா் அருகே தேவலாபுரம் ஊராட்சி வானாக்காரதோப்பு பகுதியில் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் உமா்ஆபாத் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா்.

கடையில் தடை செய்யப்பட்ட 71 கிலோ போதைப் பொருள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன்பேரில் அதே பகுதியை சோ்ந்த வேலு (61) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். போதைப் பொருளையும் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments