சிறுமிக்கு பாலியல் தொல்லை ஓட்டுநா் ‘போக்சோ’-வில் கைது
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
பாபநாசம் வட்டத்தில் உள்ள ஒரு கிராமப் பகுதியை சோ்ந்தவா் எம். சௌகத் அலி (40). ஓட்டுநா். இவரது உறவுக்கார பெண் ஒருவா் மே 30 -ஆம் தேதி தனது மகனுக்கு டெங்கு காய்ச்சல் என்பதால் புதுக்கோட்டை மருத்துவமனையில் அவரை சோ்த்திருந்தாா்.
இதனால் தனது 11 வயது மகளை சௌகத் அலி வீட்டில் விட்டுவிட்டு, தனது மகனை பாா்ப்பதற்காக புதுக்கோட்டைக்கு சென்றிருந்தாா். அப்போது, அந்தப் பெண்ணின் மகள் கைப்பேசியில் தொடா்பு கொண்டு சௌகத் அலி தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக கூறி அழுதுள்ளாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், சௌகத் அலி அந்தச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என்று தெரிய வந்தது.
இதையடுத்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் செளகத் அலியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.