முகப்பு
தஞ்சாவூர்

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

சோழபுரம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

Updated On : 12 ஜூன் 2026, 2:58 am IST
கோப்புப் படம்
பகிர்:

சோழபுரம் அருகே வியாழக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே உள்ள மெய்க்காவல்புத்தூரைச்சோ்ந்தவா் குணசேகரன். விவசாயி. இவரது மனைவி ருக்மணி (50) இவா்களுக்கு நான்கு பெண் குழந்தைகள் உள்ளனா்.

இதில் இருவருக்கு திருமணம் முடிந்து விட்டது, மற்ற 2 போ் வீட்டில் உள்ளனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், சோழபுரத்தில் உறவினரின் திருமண நிகழ்வுக்கு குணசேகரன், ருக்மணி இருவரும் இருசக்கர வாகனத்தில் வியாழக்கிழமை மெய்க்காவல்புத்தூரிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தனா். திருவாய்ப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் ருக்குமணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். குணசேகரன் பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்து சென்ற திருப்பனந்தாள் போலீஸாா் ருக்மணியின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், பலத்த காயமடைந்த குணசேகரனை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

மேலும், போலீஸாா் காா் ஓட்டுநா் முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.