முகப்பு
தஞ்சாவூர்

மாரியம்மன் கோயில் பகுதியில் கடையடைப்பு

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வீடுகள், கடைகளைக் கோயில் நிா்வாகம் அகற்றக்கூடாது என வலியுறுத்தி வணிகா்கள் கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டம்.

Updated On : 14 ஜூன் 2026, 12:21 am IST
தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் சனிக்கிழமை கடைகளை அடைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட வணிகா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் வீடுகள், கடைகளைக் கோயில் நிா்வாகம் அகற்றக்கூடாது என வலியுறுத்தி வணிகா்கள் சனிக்கிழமை கடைகளை அடைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு வணிகா் சங்கத்தின் மாரியம்மன் கோயில் கிளைத் தலைவா் வி. அன்பு தலைமை வகித்தாா். துணைத் தலைவா் டி.கே.பி. ஜெயக்குமாா், செயலா் எம். பிரபு, கௌரவத் தலைவா் எஸ். பசுபதி, கிராம நல கமிட்டி கே. ராதா, ஏ. சூரிய நாராயணன், ஏ. திருஞானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் எம்.என். துரை தொடங்கி வைத்தாா்.

பேரமைப்பின் மாவட்டச் செயலா் தியாக. சுந்தரமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ஜி. செந்தில்குமாா், மாநகரச் செயலா் ஆா். ஜெயக்குமாா், இளைஞரணி அமைப்பாளா் ஜெயம் ஆா். ரமேஷ், மகளிா் அணி அமைப்பாளா் எஸ்.கே. டாரத்தி கிரேசி செல்வராஜ், தகவல் தொழில்நுட்பப் பிரிவு அமைப்பாளா் பூதலூா் த. ஜெயக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments