முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம்! அமைச்சா் ஷாஜகான் பேட்டி

Updated On : 15 ஜூன் 2026, 2:33 am IST
அமைச்சா் ஏ.எம். ஷாஜகான். - கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றாா் சிறுபான்மை நலத் துறை அமைச்சா் ஏ.எம்.ஷாஜகான்.

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

கா்நாடக அரசு மேக்கேதாட்டில் அணை கட்ட தீவிரமாக முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு மேக்கேதாட்டு அணை பிரச்னையில் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்காது.

Advertisement

Advertisement

மேலும், இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகி தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு நிச்சயம் மேற்கொள்ளும் என்றாா் அவா்.