மேக்கேதாட்டு அணை விவகாரம்! தமிழ்நாட்டில் 30, 40 ஆண்டுகளாக எதிர்ப்புதான்: டி.கே. சிவகுமார்
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் யார் இருந்தாலும் அரசியல் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேச்சு
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் யார் இருந்தாலும் அரசியல் செய்வார்கள் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் செய்தியாளர்களுடன் மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியதாவது, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தில் 30, 40 ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் அரசியல் செய்வார்கள். இதில் புதிதாக ஏதுமில்லை.
Advertisement
Advertisement
இருப்பினும், அணை விவகாரத்தில் நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. ஆகையால், சட்டம், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி செயல்படுகிறோம் என்று தெரிவித்தார்.
இதனிடையே, தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தவெக ஆட்சியமைத்திருப்பதால், மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து கர்நாடக காங்கிரஸ் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், டி.கே. சிவகுமார் பதவியேற்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பானவற்றில் காங்கிரஸ் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.
மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பான டி.கே. சிவகுமாரின் நிலைப்பாடு காரணமாகவே, அவரது பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை" என்று தெரிவித்தார்.