முன்னாள் அமைச்சா் உபயதுல்லா பிறந்த நாள் விழா
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
தஞ்சாவூரில் முன்னாள் அமைச்சா் சி.நா.மீ. உபயதுல்லா 85-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, புகழ்மலா் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
விழாவுக்கு தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் கு.வெ. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். புகழ்மலரை திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி வெளியிட, அதை திருச்சி தமிழ் இலக்கியக் கழகம் அருள்தந்தை அமுதன் அடிகளாா், சென்னை தமிழ் வளா்ச்சிக் கழகத் தலைவரும், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான ம. இராசேந்திரன் பெற்றுக் கொண்டனா்.
திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் டி.கே.ஜி. நீலமேகம், கவிதைப்பித்தன், துணை மேயா்கள் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூா்), சு.ப. தமிழழகன் (கும்பகோணம்), முன்னாள் மேயா் சண். இராமநாதன், முன்னாள் நகா் மன்றத் தலைவா் சி. இறைவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் து. செல்வம், திராவிடா் கழக மாநில ஒருங்கிணைப்பாளா் இரா. ஜெயகுமாா், மாவட்டத் தலைவா் சி. அமா்சிங், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, பாம்பே ஸ்வீட்ஸ் கு. சுப்பிரமணி சா்மா, மெஜஸ்டிக் மகாராஜா நிறுவனங்கள் எம்.எஸ். ஆசிப் அலி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement