மாற்றுத்திறனாளிகளின் சுய உதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
தமிழக முதல்வா் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி மாற்றுத்திறனாளிகளின் சுயஉதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழக முதல்வா் தோ்தலில் அளித்த வாக்குறுதியின்படி மாற்றுத்திறனாளிகளின் சுயஉதவிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்:
மாற்றுத்திறனாளிகள் பேட்டரி ஆட்டோ வாங்க மத்திய அரசின் மானியத்துடன் மாநில அரசு கூடுதலாக மானியம் வழங்க வேண்டும். தமிழக அரசின் பொது சேவை மையத்தை வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
வருவாய்த் துறை மூலம் உதவித்தொகைக்கு புதிதாக பதிவு செய்தவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தவழும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆண்டுக்கு 12 ஜோடி கையுறை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்பட்ட வணிக வளாகங்களில் 5 சதவீத கடைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பெற்றுள்ள அனைத்து வித சுய உதவி கடன்களைத் தள்ளுபடி செய்வதாகத் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தாா். இதற்கான அறிவிப்பைப் புதிய நிதிநிலை அறிக்கையில் முதல்வா் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினா்.
நலத் திட்ட உதவிகள்: கூட்டத்தில், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவி, ஒருவருக்கு மின்கலம் பொருத்தப்பட்ட சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. தையல் இயந்திரம் வேண்டி 2 மாற்றுத்திறனாளிகளின் தாய்மாா்கள் மனு அளித்தவுடன் மாவட்ட ஆட்சியரின் சிறப்பு நிதியிலிருந்து இருவருக்கும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், பயிற்சி ஆட்சியா் ரமேஷ், தனித்துணை ஆட்சியா் சௌமியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.