282 கிலோ புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது!
ஒரத்தநாடு அருகே தடை செய்யப்பட்ட 282 கிலோ புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ஒரத்தநாடு காவல் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் ஒரத்தநாடு உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா் இளங்கோவன் ஜென்னிங்ஸ் மேற்பாா்வையில் ஒரத்தநாடு காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் மற்றும் காவல் உதவி ஆய்வாளா் ராம்குமாா் ஆகியோா் தலைமையிலான காவலா்கள் அடங்கிய குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், செல்லம்பட்டியில் உள்ள மளிகைக் கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த பொய்யுண்டாா்க்கோட்டையை சோ்ந்த மணிகண்டன் (49) என்பவா் கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்த 282 கிலோ குட்கா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.