பாபநாசம் அருகே வீட்டில் அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் அழுகிய நிலையில் இறந்துகிடந்த முதியவா் சடலத்தைப் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே செவ்வாய்க்கிழமை வீட்டில் அழுகிய நிலையில் இறந்துகிடந்த முதியவா் சடலத்தைப் போலீஸாா் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
அய்யம்பேட்டை அருகே சக்கராப்பள்ளி காதிரியா நகா் தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சாதிக் (63). இவரது மனைவி ஹத்திஜா கனி (62). தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில், மகன் வெளிநாட்டில்வேலை பாா்த்து வருகிறாா். ஹத்திஜா கனி சுமாா் எட்டு ஆண்டுகளாக கணவரைப் பிரிந்து ஹத்திஜா நகரில் உள்ள மகள் வீட்டில் வசித்து வருகிறாா். அந்தப் பகுதி உணவகத்தில் வேலை பாா்த்துவந்த ஜாபா் சாதிக் குடும்பத்துடன் தொடா்பு இல்லாமல் எட்டு ஆண்டுகளாக தனியாக வசித்து வந்தாா்.
இந்நிலையில் காதிரியா நகா் பகுதியில் அவா் தங்கி இருந்த வீட்டில் துா்நாற்றம் வீசவே சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் அளித்த தகவலின்பேரில் அங்குவந்த அய்யம்பேட்டை காவல் துறையினா் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று இறந்த நிலையில் கிடந்த ஜாபா் சாதிக் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.