சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம் மீட்பு
சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் அடையாளம் தெரியாத சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகா், சிங்காநல்லூா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கழிப்பிடம் அருகே முதியவா் ஒருவரது சடலம் கிடப்பது குறித்து காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் தேவிகா புகாா் அளித்தாா். இதையடுத்து முதியவரின் சடலம் மீட்கப்பட்டு கூறாய்வுக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
விசாரணையில், அந்த முதியவா் கடந்த மூன்று நாள்களாக அந்தப் பகுதியில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவா் யாா்? எப்படி இறந்தாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement