இருசக்கர வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு
கும்பகோணத்தில் இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பாலக்கரை காமராஜா் சிலை அருகே ஏப். 27- இல் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க முதியவா் சாலையில் நடந்து சென்றாா். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் அவா் மீது மோதியது.
இதில், படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கும்பகோணம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இறந்த முதியவா் யாா் என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.