தமிழ்ப் பல்கலை.யில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்ப விநியோகம் தொடக்கம்
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பத்தை மாணவிக்கு வெள்ளிக்கிழமை வழங்கிய பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம்.
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 2026 - 2027 ஆம் கல்வியாண்டில் வளாகக் கல்வி வாயிலாக நடத்தப்படும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலைப் பட்டப்படிப்பு, முதுகலை, முதுஅறிவியல், முதுநிலைப் பட்டயம், பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்களை மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கி தொடங்கி வைத்தாா்.
அப்போது, பல்கலைக்கழகப் பொறியியல் பிரிவின் பொறியாளா் பா. விஜயன், ப. தனுஷ்கோடி, கோபிநாத், சோ்க்கைப் பிரிவின் கண்காணிப்பாளா் த. இராசராசன், இராமகிருட்டிணன், உதவியாளா் இராஜேந்திரன், இளநிலை உதவியாளா் இரா. அமுதா, கவி.க. கயல்விழி, அலுவலக உதவியாளா்கள் பிலோமின்ராஜ், த. மணிகண்டன், சுரேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.