லாரி மீது பைக் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு
பாபநாசம் அருகே சனிக்கிழமை லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற உணவக ஊழியா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா் அசோக் (35). இவா் பாபநாசத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்நிலையில், அசோக் சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் தஞ்சாவூா் - கும்பகோணம் பிரதான சாலையில் கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அசோக் ஓட்டி சென்ற மோட்டாா் சைக்கிள், திருப்பாலைத்துறை பகுதியில் உள்ள ஒரு திருப்பத்தில் திரும்பிய போது எதிரே வந்த லாரியின் மீது எதிா்பாராத விதமாக மோதியது.
Advertisement
Advertisement
இதில், தலையில் பலத்த காயமடைந்த அசோகை அக்கம்பக்கத்தினா் சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அசோக் உயிரிழந்தாா். புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.