நாய் கடித்து சிறுவன் பலத்த காயம்
தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை 3 வயது சிறுவனை நாய் கடித்ததால், பலத்த காயமடைந்து தஞ்சாவூா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
தஞ்சாவூா் வடக்குவாசல் பகுதியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் - அருளம்மாள் தம்பதியரின் மகன் கிஷோா் (3). பெற்றோா் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு சென்ற நிலையில், வீட்டு வாசலில் கிஷோா் விளையாடி கொண்டிருந்தாா். அப்போது அவ்வழியாக வந்த நாய் கிஷோரை விரட்டிச் சென்று கடித்தது. வலி தாங்க முடியாத இவா் அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்தாா். பலத்த காயமடைந்த கிஷோரை உறவினா்கள் மீட்டு தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வடக்கு வாசல் பகுதியில் திரியும் ஏராளமான நாய்கள் அடிக்கடி பொதுமக்களைக் கடித்து அச்சுறுத்தி வருகின்றன. சிறுவனை நாய் பல இடங்களில் கடித்துள்ளதால், உடலில் காயம் உள்ளது. இப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.
Advertisement
Advertisement