பள்ளியில் தீ விபத்து விழிப்புணர்வு
துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
துறையூர் வட்டம் வெங்கடாசலபுரம் மானிய நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு நாளையொட்டி உப்பிலியபுரம் தீயணைப்புத் துறை சார்பில் தீ விபத்து மற்றும் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியர் வா. ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சபீனா வரவேற்றார். தீ விபத்து, வெள்ளம், புயல் நிலநடுக்கம், இடி மின்னல் போன்ற இயற்கை பேரிடரின்போது விழிப்புணர்வுடன் செயல்படுவது
குறித்து உப்பிலியபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் அறிவழகன் தலைமையில் செயல் விளக்கமளித்தனர். 8 ஆம் வகுப்பு மாணவி சந்தியா நன்றி கூறினார்.