அகில இந்திய கபடிப் போட்டியில் தமிழ்நாடு போஸ்டல் அணி முதலிடம்
மணப்பாறையில் திமுக சார்பில் நடைபெற்ற கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பைக்கான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போஸ்டல் (அஞ்சல் துறை) அணி கோப்பையை கைப்பற்றியது.
மணப்பாறையில் திமுக சார்பில் நடைபெற்ற கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பைக்கான கபடிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு போஸ்டல் (அஞ்சல் துறை) அணி கோப்பையை கைப்பற்றியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகரில் திமுக தலைவர் கருணாநிதி, செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளையொட்டி ஒன்றிய கழகம் சார்பில் வியாழக்கிழமை (ஜூலை 19) முதல் நான்கு நாள்கள் கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பைக்கான அகில இந்திய கபடிப் போட்டிகள் நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் தமிழ்நாடு போஸ்டல் அணியும், சென்னை ஐசிஎப் அணியும் மோதின. இதில் 27க்கு 21 என்ற புள்ளிக் கணக்கில் ஐசிப் அணியை வீழ்த்தி தமிழ்நாடு போஸ்டல் அணி முதல் பரிசுத் தொகை ரூ.2 லட்சம் ரொக்கம், கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பையை கைப்பற்றியது.
அதேபோல, பெண்கள் பிரிவில் 15க்கு 17 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியாணா அணியை வீழ்த்திய புதுதில்லி அணி முதல் பரிசுத் தொகை ரூ.1 லட்சம் ரொக்கம், கே.என்.ராமஜெயம் நினைவு கோப்பையை கைப்பற்றியது.
பல்வேறு மாநிலங்களில் இருந்து தலா 27 ஆண், பெண்கள் அணி பங்கேற்றன.
விழாவுக்கு ஒன்றியச் செயலாளர் சி.ராமசாமி தலைமை வகித்தார்.
கபடிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பரிசு, கோப்பைகளை வழங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.