மழைக்காலத்துக்கு முன்பே நீர்நிலைகளை தூர்வார வலியுறுத்தல்
துறையூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை மழைக்காலம் தொடங்கும் முன்பு தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துறையூர் பகுதியில் உள்ள வாய்க்கால்களை மழைக்காலம் தொடங்கும் முன்பு தூர் வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொல்லிமலையில் பெய்கிற மழைநீர் புளியஞ்சோலை ஆறு வழியாக இரண்டாகப் பிரிந்து நெட்டவேலம்பட்டி, பச்சபெருமாள்பட்டி, ஆலத்துடையான்பட்டி ஏரிகளையும் வைரிசெட்டிப்பாளையம் ஜம்பேரியையும் நிரப்பி இறுதியாக முசிறி காவிரியில் கலக்கும். இதேபோல் பச்சமலையில் பெய்கிற மழை நீர் காணாப்பாடி ஆறு வழியாக நரசிங்கபுரம் ஏரி, செங்காட்டுப்பட்டி மாவடி ஆறு வழியாக கீரம்பூர், துறையூர் ஏரி உள்ளிட்ட அடுத்தடுத்த ஏரிகளை நிரப்பி இறுதியாக முசிறி காவிரியில் கலக்கும். ஆனால் பல ஏரிகள் மற்றும் கடைக்கால் வாய்க்கால்கள் முட்புதர்களும், செடிகளும் மண்டிக் கிடக்கின்றன.
எனவே மழைக்காலம் தொடங்கும் முன்னர் அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும் என்று துறையூர் பகுதி விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.