திருச்சி

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

DIN

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலியில் அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. 

பிரசித்தி பெற்ற இத் திருத்தலம் திருமணத் தடை நீக்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிப் பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

இதைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், உள்ளிட்ட அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு கொடியேற்றப்பட்டது.

அருள்மிகு விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தனர். இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மஹா தீபாரதனையும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான பக்தர்கள், அனைத்து கிராமபட்டைய தாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கா் யோக நரசிம்மா் கோயில் தீா்த்தக்குளம் சீரமைக்கும் பணி தொடக்கம்!

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

SCROLL FOR NEXT