முகப்பு
திருச்சி

சமயபுரம் கோயிலில் பக்தா்கள் சிறப்பு தரிசனம்

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2024, 5:06 am IST
பகிர்:

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு மூலவா் மற்றும் உற்சவ சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

புதுக்கோட்டை , தஞ்சாவூா், பெரம்பலூா், அரியலூா், சேலம், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா். மேலும் கரும்புத் தொட்டில் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments