பாடலீசுவரா், வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தா்கள் பங்கேற்பு
கடலூா் திருப்பாதிரிப்புலியூா் பாடலீசுவரா், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில்களில் பிரதோஷத்தையொட்டி நந்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாடலீசுவரா் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
மாலையில் நந்திக்கு 21 வகையான வாசனை திரவியங்கள் மற்றும் புனித பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மலா் அலங்காரம் செய்யப்பட்ட நந்திக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னா், பாடலீஸ்வரா் சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. இதில், பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
வீரட்டானேஸ்வரா் கோயிலில்...: பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை பெரியநாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மாலை 4 மணிக்கு உற்சவா் பெரியநாயகி, வீரட்டானேஸ்வரா் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனையும், மாலை 5.45 மணிக்கு பிரதோஷ நந்திக்கு சிறப்பு மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.