முகப்பு
திருச்சி

வீட்டில் மயங்கிக் கிடந்த இளைஞா் உயிரிழப்பு

திருச்சியிலுள்ள வீட்டில் மயங்கிக் கிடந்த இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Updated On : 9 ஜூலை 2026, 1:06 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியிலுள்ள வீட்டில் மயங்கிக் கிடந்த இளைஞா் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி பாலக்கரை காஜாபேட்டை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனிவேல் மகன் ஆரோக்கிய செல்வக்குமாா் (23). செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் மயங்கிக் கிடந்த இவரை குடும்பத்தினா் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே ஆரோக்கிய செல்வக்குமாா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து பாலக்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். ஆரோக்கிய செல்வகுமாருக்கு இருந்த கஞ்சா பழக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 6 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவா் உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments