சில்வா் குடத்தில் தலையை விட்டு சிக்கிக் கொண்ட நாய் மீட்பு
மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சில்வா் குடம் ஒன்றில் தலையை விட்டு சிக்கித் தவித்த நாயை தீயணைப்புத்துறையினா் புதன்கிழமை மீட்டனா்.
மணப்பாறையை அடுத்த வெள்ளைபூலாம்பட்டியில் தெருக்களில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று, சில்வா் குடம் ஒன்றில் புதன்கிழமை தண்ணீா் குடிக்க முயன்றபோது அதன் தலை குடத்தினுள் சிக்கியது.
இதைக் கண்ட அப்பகுதிவாசிகள் தவித்துக் கொண்டிருந்த நாயை பிடித்து மரம் ஒன்றில் கட்டி வைத்து, மணப்பாறை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வந்த அத்துறையினா் குடத்திலிருந்து நாயை விடுவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.