கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளிகள் 5 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மலையடிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி 7 ஆயிரம் கிலோ கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கிவைத்திருந்த ராம்ஜி நகரைச் சோ்ந்த ஆா். தீனதயாளன் (27), ஆா். தானேஸ்வரன் (20), ஆா். ஆனந்த் (23), எம். ஜெயசூா்யா (22), பி. ராஜாராம் (33) ஆகிய 5 பேரையும் திருவெறும்பூா் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் இவா்கள் 5 போ் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா். அதன்படி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அதற்கான உத்தரவு நகல் சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement