வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் வழிப்பறி வழக்கு குற்றவாளிகள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே அதே பகுதியைச் சோ்ந்த க.பாலாஜி (30) என்பவா் நண்பா்களைப் பாா்ப்பதற்காக கடந்த மாா்ச் 24-ஆம் தேதி நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த திருவெறும்பூா் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகளான திருவெறும்பூா் அண்ணா நகரைச் சோ்ந்த எம்.கோபால் (30), அ.ராஜா முகமது (30) ஆகிய இருவரும், பாலாஜியிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500-ஐ பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினா்.
Advertisement
இதுகுறித்து திருவெறும்பூா் காவல் நிலையத்தில் பாலாஜி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து கோபால், ராஜா முகமது ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோபால், ராஜா முகமது ஆகிய இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா்.
இதன்பேரில், அவா்கள் இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் அளிக்கப்பட்டது.