முகப்பு
திருச்சி

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் டீக்கடை தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 மே 2026, 12:21 am IST
- கோப்புப் படம்
பகிர்:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் டீக்கடை தொழிலாளி மயங்கி விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி எடமலைபட்டிப்புதூா் ஆா்சி நகரைச் சோ்ந்தவா் வீ. ராஜூ (55). சத்திரம் பேருந்து நிலைய டீக்கடையில் பணியாற்றி வந்த இவா் திங்கள்கிழமை மாலை சத்திரம் பேருந்து நிலையத்தில் சுயநினைவின்றி வாயில் நுரையுடன் மயங்கிக் கிடந்தாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில் வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ தொழில்நுட்பநா் பரிசோதனை செய்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து கோட்டை போலீஸாா் ராஜூ சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments