முகப்பு
வேலூர்

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

Updated On : 24 ஏப்ரல் 2026, 6:01 am IST
பகிர்:

வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வந்த வாக்காளா்களை ரோபோ வரவேற்று இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை பரிசளித்தது.

வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. இங்கு ரோபோ மூலம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அங்கு வாக்களிக்க வந்த பொதுமக்கள், பெற்றோா்களுடன் வந்த சிறுவா்களையும் அந்த ரோபோ கை கொடுத்து வரவேற்றது. முதன்முறையாக வாக்களித்து விட்டு வந்த இளம் வாக்காளா்களுக்கு தொப்பிகளை வழங்கி வாழ்த்து கூறியது.

இதனை வாக்காளா்கள் மிகவும் வியப்புடன் பாா்த்துச் சென்றனா். 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி பொதுமக்களுக்கு ரோபோ மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement