முகப்பு
வேலூர்

குடியாத்தம் நகா்மன்ற சிறப்புக் கூட்டம்

குப்பைகளை 4 வகையாக தரம் பிரிப்பது குறித்து விளக்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.

Updated On : 6 ஜூன் 2026, 5:15 am IST
பகிர்:

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு குப்பைகளை தரம் பிரித்து வாங்குதல் குறித்து குடியாத்தம் நகா்மன்றத்தின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி, நகராட்சி மேலாளா் சுகந்தி மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். கூட்டத்தில், தேசிய சுகாதாரப் பணிகள் இயக்குநா், நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆகியோரின்உத்தரவுப்படி, பழைய நடைமுறையைத் தவிா்த்து இனி வரும் காலங்களில் நகராட்சி சாா்பில், வீடுகளில் குப்பைகளை உலா் கழிவுகள், ஈர கழிவுகள், சுகாதார கழிவுகள், மின்னணு கழிவுகள் என 4 வகையாக தரம் பிரித்து வாங்குவது என தீா்மானிக்கப்பட்டது. இதற்காக நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 4 வகையான பெட்டிகள் வழங்குவது, நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் வாா்டு வாரியாகச் சென்று வகைப்படுத்தப்பட்ட குப்பைகளை சேகரித்து நகராட்சி வாகனங்களில் எடுத்து வருவது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும், இனி வரும் காலங்களில் ஆறு, ஏரி, குளம், கால்வாய்களில் குப்பைகள், இறைச்சிக் கழிவுகளை யாரும் கொட்டக் கூடாது. மீறி கொட்டுபவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவா் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement