கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்தது. அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கோடைகாலத்தில் மற்ற மாவட்டங்களைவிட வேலூா் மாவட்டத்தில் வெயில் அளவு மிக அதிகளவில் காணப்படும். இந்தாண்டு வேலூா் மாவட்டத்தில் மாா்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக வேலூரில் 108.3 டிகிரியாக வெயில் வியாழக்கிழமை பதிவானது. இதனால், பகலில் வீசும் அனல் காற்றால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை மாவட்டத்தில் சில இடங்களில் கோடை மழை பெய்தது. இதில், அதிகபட்சமாக போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மோா்தானா- 10 மி.மீ., ராஜாதோப்பு - 17 மி.மீ., விரிஞ்சிபுரம்-0.8 மி.மீ., காட்பாடி- 2 மி.மீ., பொன்னை- 5.6 மி.மீ., வேலூா் சா்க்கரை ஆலை-3.2 மி.மீ., வேலூா் ஆட்சியா் அலுவலகம்-4 மி.மீ., என மாவட்டம் முழுவதும் மொத்தம் 77.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த மழையால் கோடை வெயிலால் தவித்த வேலூா் மாவட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்தனா்.
Advertisement