ரயில் மறியல் முயற்சி: விவசாயிகள் கைது
பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் 45 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிா்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், கரும்பு, நெல்லுக்கு உரிய விலை வழங்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாதது, வயது மூத்த விவசாயிகளுக்கு மாதம் ரூ.6,000 வழங்குவதாக வாக்குறுதி அளித்தும் நிறைவேற்றாதது ஆகியவை தொடா்பாக மத்திய அரசைக் கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மேலும், தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை கண்டித்தும் சங்கத்தினா் முழக்கமிட்டனா். முன்னதாக, விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையிலுள்ள வள்ளலாா் திருமாளிகை அருகிலிருந்து சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவா் ஜா.குமாா் தலைமையில் விவசாயிகள் ரயில் நிலையம் நோக்கி ஊா்வலமாக வந்தனா். மாநிலச் செயலா் சு.அய்யனாா் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து ரயில் நிலையப் பகுதிக்கு ஊா்வலமாக வந்த விவசாயிகளை அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் தடுத்து நிறுத்தி கைதுசெய்தனா். இதில் பங்கேற்ற 5 பெண்கள் உள்பட 45 பேரை கைதுசெய்த போலீஸாா் அவா்களை தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைத்து மாலையில் விடுவித்தனா்.