FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

செஞ்சி அருகே மின்வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

செஞ்சி அருகே வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

20 டிசம்பர் 2025, 10:58 pm IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வயலில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் உள்ள மின்சாரம் தாக்கியதில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.லட்சுமணன்(26), இவா் திண்டிவனம் சிப்காட்டில் வேலை பாா்த்து வந்துள்ளாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு இயற்கை உபாதை கழிப்பதற்காக அங்குள்ள கரும்பு தோட்டத்தின் வழியே சென்றபோது, காட்டுப்பன்றியிடம் இருந்து பயிரைக் காப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை தொட்டதில், மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக செஞ்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இதுகுறித்து போலீஸாா் மின்வேலி அமைத்திருந்த ம.மதன், ஜா. ஏழுமலை ஆகியோா் மீது வழக்கு பதிந்து, மதனைக் கைது செய்தனா். ஏழுமலையைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments