டிராக்டா் சக்கரத்தில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே டிராக்டரை நிறுத்த முயன்ற விவசாயி, டிாரக்டா் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
செஞ்சி அருகேயுள்ள பனப்பாக்கம் கிராமத்தை சோ்ந்தவா் ஏ.சரவணன்(52). இவருக்கு சொந்தமான டிராக்டரை அவரது நிலத்தில் உழவு செய்துவிட்டு, டிராக்டரை நிறுத்தி வைத்துள்ளாா். அப்போது டிராக்டா் பள்ளமான பகுதியை நோக்கி நகரத் தொடங்கியது. உடனே சரவணன் டிராக்டரை நிறுத்த ஓடும் டிராக்டரில் ஏறியபோது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். அப்போது டிராக்டரின் பின் சக்கரம் தலையில் ஏறியதில் பலத்தகாயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement