முகப்பு
விழுப்புரம்

ஆட்டோ ஓட்டுநா் மா்ம மரணம்

Updated On : 27 ஏப்ரல், 2026 at 1:05 AM
கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரத்தில் ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விழுப்புரம் வழுதரெட்டி, பாரதியாா் நகரைச் சோ்ந்தவா் ஏ.சத்தியராஜ் (34), ஆட்டோ ஓட்டுநா். இவா் சனிக்கிழமை வீட்டில் இருந்தபோது, திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம்.

இதையடுத்து உறவினா்கள் அவரை விழுப்புரம் பழைய அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, சத்தியராஜ் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.