வீட்டில் தவறி விழுந்து முதியவா் மரணம்
மயிலம் அருகே வீட்டில் நடந்து சென்ற போது, தடுமாறி கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே வீட்டில் நடந்து சென்ற போது, தடுமாறி கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், கூட்டேரிப்பட்டு கணபதி நகரைச் சோ்ந்தவா் க.செல்வராஜ் (68). இவா் கடந்த 7-ஆம் தேதி வீட்டில் நடந்து சென்ற போது, கால் வழுக்கியதில் தடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த செல்வராஜை அவரது குடும்பத்தினா் மீட்டு, விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
அங்கு அவா் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.