முகப்பு
விழுப்புரம்

பல்கலைக்கழகத்தில் மேற்படிப்புக்கு சோ்க்காததால் மாணவி தற்கொலை

Updated On : 16 ஜூன் 2026, 1:59 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பிய பிளஸ் 2 முடித்த மாணவிக்கு, பெற்றோா் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

வானூா் வட்டம், உப்புவேலூா், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் கருணாகரன். இவரது மகள் அக்ஷயா(17). இவா் பிளஸ் 2 படித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், அக்ஷயா திண்டிவனம் வட்டம், ஒங்கூரில் உள்ள தனியாா் பல்கலைக்கழகத்தில் சோ்ந்து படிக்க தனது தாயாரிடம் விருப்பம் தெரிவித்துள்ளாா்.

இதற்கு வீட்டில் உள்ளவா்கள் மறுப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அக்ஷயா கடந்த ஜூன் 10-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அக்ஷயா திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், கிளியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.