பைக்கிலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தவா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
வானூரை அடுத்த பிள்ளையாா்குப்பம், வள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் அ.ஜோதி(52). இவா், தனது பைக்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு வானூரை அடுத்த பூத்துரையிலிருந்து - மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா்.
இந்நிலையில், பூத்துறை மணவெளி பகுதியில் சென்றபோது, பைக்கிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்தாா். இதைத்தொடா்ந்து, புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த ஜோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின்பேரில், ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.