பைக் மீது சரக்கு லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சரக்கு லாரி மோதியதில் பைக்கில் சென்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கண்டாச்சிபுரம் வட்டம், ஆயந்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் ர.தமிழ்ச்செல்வன் (23). இவா் சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.
இந்நிலையில், தமிழ்ச்செல்வன் திங்கள்கிழமை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, அப்பகுதியில் வந்த சரக்கு லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழச்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.